Monday, February 23, 2009

வாழ்த்துக்கள் A.R. ரஹ்மான்..


இரண்டு ஆஸ்கார் விருதை வென்ற நம் மண்ணின் மைந்தன் A.R. ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

Saturday, February 21, 2009

பெண்களிடம் பத்து கேள்விகள்?

பெண்களிடம் பத்து கேள்விகள்?

1. நீங்க பொண்ணுங்க எல்லாம் கும்பலா தமிழ்ல பேசிகிட்டு போகும்போது குறுக்கால ஒரு பையன் வந்த உடனே இங்கிலிஷ்ல பீட்டர் உடுறீங்களே அது ஏன்?

2. அருக்கானியா இருக்குற நீங்க கூட அஜித் அரவிந்த்சாமி மாதிரி பய்யன் வேணும்னு அடம்புடிகீறேன்களே அது ஏன்?

3. காலேஜ் படிக்கும் போது இழுத்து போத்திக்கிட்டு சுடிதார்ல போவீங்க, சாப்ட்வேர்ல வேலை கெடச்சவுடனே கவர்சிகரமா டி-சர்ட் ஜீன்ஸ் போட்டுகீரின்களே இது எதுக்கு?

4. ஐ ஹீல்ஸ் போட்டுக்கிட்டு ஆட்டோல போகும்போதுகூட அந்த சின்ன கேப்ல கூட கால் மேல கால் போட்டுக்கிட்டு போறிங்களே எதுக்கு இந்த அலம்பல்?

5. தமிழ்ல இல்லாத நாவலா, தமிழ்ல இல்லாத பூத்தகமா? லியோ டோல்ஸ்டோய் இல்லனா இங்கிலீஷ் பூக்ச்யே படிகீறேன்களே இது எதுக்கும்மா?

6. தமிழ் பேசுற பசங்களே உங்க கண்களுக்கு தெரிய மாட்டேங்குதே, நுனி நாக்குல இங்கிலீஷ் பேசற பயன்னா மட்டும் லுக்கு வுட்ரீன்களே ஏன் இப்படி?

7. அந்த இங்கிலீஷ் பேசற பசங்கள இருக்குற எடம் எல்லாம் உட்டுட்டு காபி ஷாப்புக்கு நடைய கட்றீங்களே ஏண்டியம்மா?

8. அப்படியே தளிட்டு போனாலும், பில்ல அவன் தலையுல கட்றீங்களே ஏன்?

9. அப்படி போகும்போது பைக்ல பின்னாடி வக்காந்திடு போகும் போது முகத்த மூடிக்கிட்டு போறேன்களே அது ஏன்?

10. எல்லாத்தையும் பண்ணிட்டு கல்யாணம்ன சைலேண்ட கழிட்டி விட்டுட்டு அமெரிக்கா மாப்பிளையோ இல்லனா துபாய் மாப்பில்லையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டு இவனுகளுக்கு ஆப்பு வெக்கறீங்களே என்ன நியாயம்?

இந்த மாதிரி பத்து கேள்விகள்னு ஆரம்பித்த எங்கள் அஞ்சா நெஞ்சன் வெட்டியாருக்கு கோடான கோடி நன்றி..

Sunday, February 15, 2009

நெஞ்சம் மறப்பதில்லை...

உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளது. இந்தியாவில் தான் எத்தனை எதிர்ப்புகள். எத்தனை போராட்டங்கள். இவர்கள் எதோ மிருகங்களை போலவும் காட்டு மிராண்டிகளை போலவும் நடந்து கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்கள் வாழ்கையில் காதலித்ததே இல்லையா. இவர்கள் தம் மனைவிமார்களை காதலிப்பது இல்லையா? அப்படியென்றால் அவர்களை கொத்தடிமைகளாய் நடத்துகிறார்கள் என்று தானே அர்தம். இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை.

காதல் - இது வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒன்று. இது உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். காதலிப்பதும் காதலிக்கபடுவதும் எத்தனை மேலானது என்பது இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி தெரியும்? நீங்கள் காதலிக்கீறீர்கள் என்றால் நீங்கள் மனிதர்கள். காதலிகாபடுபவர்கள் புண்ணியவான்கள். அதிர்ஷ்டகாரர்கள். ஆம். நீங்கள் காதலிக்கபடுகீறீர்கள் என்றால் உங்களின் மீது ஒருவர் அக்கறை செலுத்துகிறார் என்று அர்த்தம். உங்கள் மீது அன்பு செலுத்தப்படுகிறது என்று அர்த்தம். காதலை எதிர்க்கும் மூடர்களே சற்றே சிந்தித்து பாருங்கள்.

இன்று இதை எதிர்க்கும் இந்து அமைப்புகளே நீங்கள் காதலை எதிர்கீறீர்கள் என்றால் உங்கள் கடவுளான கண்ணனை எதிர்கீறீர்கள். உங்களுக்கு கீதையை வழங்கிய கிருஷ்ண பரமாத்மாவை கலங்க படுத்துகீறீர்கள். கிருஷ்ணன் புரியாத காதல் லீலையா? எந்த மதமும் காதலை, அன்பை, நேசத்தை பறை சாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காதலை எதிர்பவர்கள் காட்டுமிராண்டிகள். காதல் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கிறது.

அன்பு இல்லையென்றால் இந்த உலகம் இல்லை.
காதலர்களே உங்கள் காதல் உண்மையாயின் அது உங்களை சேர்த்து வைக்கும்.

காதலுக்கு வெற்றி தோல்வி என்பது கிடையாது. காதல் காலங்களை கடந்து நிற்கும்.

நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை.

Saturday, February 14, 2009

நான் பூச்சாண்டி.. அஹம் பூத்நாத்..

இரண்டரை மாதங்கள் கழித்து மீண்டும் வந்துவிட்டேன். (அட, நெஜமாவே ரயிலு வண்டியிலதாங்க வந்தேன்). தொடர்ந்து பதிவு போடமுடியவில்லை. எல்லாம் பணி சுமை காரணமாகத்தான். இனியாவது தொடர்ந்து போட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்துல்ல எவ்வளவோ மாற்றங்கள். இங்கே பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது. ஓராயிரம் பதிவுகள் தேவை படும். மாற்றங்கள் மட்டுமே மாறாதது. (நீங்க சொல்றது என் காதுல விழுது, என்னடா ரொம்ப பேசறேன்னு நினைகிறீங்க. சரி சரி நேர விஷயத்துக்கு வந்துடுறேன்).

போன வாரம், என் நண்பனை (சத்தியமா நண்பி இல்ல) சந்திக்க திருவான்மியூர் கடற்கரைக்கு போயிருந்தேன். என் போறாத நேரம் அன்றைய தினம் செல் போன்ல சார்ஜ் போட மறுந்துட்டேன். செல் சுவிட்ச் ஆப் ஆகிடிச்சு. அவன எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அவனோட நம்பரும் ஞாபகத்தில் இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கும் இங்கும் சுத்திகிட்டு கடைசியில ஒரு வழிய பார்த்துபுட்டேன். அப்ப தான் கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன். இதே நான் கல்லூரியில் படிக்கும் போது (2003) என் நண்பர்கள், சொந்தங்கள்னு அதன பேரோட நம்பரும் எனக்கு அத்துபடி. தூகதுள்ள எழுப்பி கெட கூட எந்த நம்பெர் வேனாலும் கரெக்டா சொல்வேன். அப்பவெல்லாம் இந்த செல் போன் அவ்ளோ பிரபலம் கிடையாது. அப்பதான் இந்தியாகுள்ள செல் போன் காலடி எடுத்து வச்சது. இந்த செல் போன் வாங்குனதுக்கு பிறகு எல்லாம் அதுல போட்டாச்சு. நம்ம ஞாபகத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா போயாச்சு. இப்படி தன் பல பேரு இருக்கோம். இந்த வின்ஞான வளர்ச்சியில நாம எல்லாம் நம்மளோட தனி தன்மையை இழந்து கிட்டு வருகிறோம். சுருக்கமா சொல்லனும்னா நம்ம கிட்னியை (அதாங்க பிரைன்னு) உபயோகபடுதுரது இல்லை. (நீங்க என்ன சொல்லவரீங்கன்னு புரியுது. யூஸ் பன்னாமத்தான் இத்தனையும் கண்டுபுடிசொமான்னு கேட்கறீங்க. இங்க சொல்லறது வேற). நம்மளோட ஞாபக திறனை முழுமையாக உபோயோக படுத்துவதில்லை. இதோ சில உதாரணங்கள்:
1. மேல சொன்ன மாதிரி செல் போன் நம்பெர் எல்லாம் செல்லுல வசிக்கிறது.
2. அலுவலகங்களில் எல்லா வேலையையும் செய்ய "To do list" வசிக்கிறது.
3. சின்ன சின்ன கணக்குகல போட கணினியில இருக்கும் கேல்கிலேடற தேடி போட்றது.

இதை எல்லாம் நானும் செய்றேன். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எல்லாம் வர்றதுக்கு முன்னாடி எப்படி செய்தோம்? இந்த அறிவு, மூளை, ஞாபக திறன் எல்லாம் நமக்கு இயற்கை அளித்த வரம். அவ்வற்றை நாம் முழுமையாக உபாயோக படுத்தி கொள்ள வேண்டும்.

சீனர்கள் எப்படி எளிய வழியில் பெருக்குகீறார்கள் என்பதை காணவும்.




எல்லோர்க்கும் என் உளமார்ந்த காதலர்/அன்பர்(அன்பர் தினம் - இப்படி தான் இன்று பல பேர் சொல்றாங்க) தின வாழ்த்துக்கள்.

குறிப்பு: இது ஒரு மொக்கை பதிவு. அதனால் தான் தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே எழுதி இருக்கேன்.