Saturday, November 29, 2008

மிதக்கிறது (புற நகர்) சென்னை...



சோழிங்கநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடி இருப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.





கிரோம்பேட்டை பேருந்து நிலையம். மாலை 6:30 மணிக்கே இருட்டி கொண்டு மழை கொட்டியது.






சோழிங்கநல்லூர் விப்ரோ நிறுவனம் கட்டப்படும் இடும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

அஞ்சலி

மும்பை தீவிரவாதிகளை எதிர்த்து போராடி தம் இன்னுயிரை நீத்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், அசோக் கம்டே, மற்றும் பலருக்கும் பூச்சாண்டியின் வீர வணக்கங்களும் அஞ்சலியும். இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.



Major Sandeep Unnikrishnan.



Ashok Kamte (Addl Commisioner)












Hemant Karkare (ATS Cheif)

உலகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியாக இருக்க முடியும்.

இனியும் தாமதிக்காமல், தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கு மத்திய அரசு முன் வர வேண்டும். செய்யுமா?

Saturday, November 15, 2008

உலகம் சேமிக்க, அமெரிக்கா செலவழிக்க...

ஜப்பானியர்கள் அதிகமாக சேமிப்பார்கள். அதிகமாக செலவு செய்யமாட்டார்கள். மேலும் ஜப்பானின் ஏற்றுமதி அவர்கள் செய்யும் இறக்குமதியை விட அதிகம். அவர்களின் ஆண்டு வர்த்தகம் $100 பில்லியன்கள். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் வீக்குதான். கட்டடம் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக்குங்க்ற மாதிரி.

இதற்க்கு நேர்மாறாக அமெரிக்க பொருளாதாரம். அமெரிக்கர்கள் நிறைய செலவு செய்வார்கள் கொஞ்சமாக செமிப்பார்கள். அமெரிக்காவின் இறக்குமதி அதிகம், ஏற்றுமதி குறைவு. ஆண்டு வர்த்தகம் $400 பில்லியன். இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வலிமையாகவே கருதப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு செலவு செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது? ஜப்பானிலிருந்தும் சீனாவிலிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பெரும் பணம்தான் இவை. சொல்லபோனால் மாற்ற நாட்டினர், அமெரிக்கா செலவு செய்வதற்காக சேமிக்கின்றனர். உலகத்தின் சேமிப்பு மொத்தம் அமெரிக்காவில் தான் முதலீடு செய்யப்படுகிறது.

இந்தியாவே அமெரிக்காவில் $100 பில்லியன் அளவுக்கு அந்நிய சொத்துகளாக (Foriegn Assets) குவித்துள்ளது. சீனா $160 பில்லியன். ஜப்பான் ட்ரில்லியன்களில்.
முடிவு: அமெரிக்கா இதுவரை $5 ட்ரில்லியன் ஏப்பம் விட்டுள்ளது. உலகம் சேமிக்க, அமெரிக்கர்கள் செலவு செய்கிறார்கள். இன்று அமெரிக்கா பொருளாதாரம் மீள நாடுகள் ஒவ்வொரு காலாண்டும் $180 பில்லியன்களை அழ வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் அமெரிக்கா பொருளாதாரம் வலுவிழந்துவிடும். அப்படியே உலக பொருளாதராமும். அமெரிக்கா சீனாவில் முதலீடு செய்ததைவிட சீனா அமெரிக்காவில் முதிலீடு செய்ததுதான் அதிகம். இந்தியா $50 பில்லியன் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவோ, இந்தியாவில் செய்துள்ள முதலீடு $20 பில்லியனுக்கும் கீழ்.

ஏன் உலகம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்துள்ளது? அமெரிக்கர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். எதிர்கால வருவாயை கருத்தில் கொண்டு அதிகமாக கடன் அட்டையை உபயோகிகீரார்கள். இந்த செலவினமே அதிகபடியான ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது மற்ற நாடுகளுக்கு. முடிவு, உலகம், அமெரிக்காவின் பொருளாதரத்தை சார்ந்து இயங்க ஆரம்பித்து விட்டது. இதுவே அமேரிக்கா இயங்க மற்ற நாடுகள் முதலீடு செய்ய வழி வகுத்து விட்டது. இது எப்படி என்றால், கடைக்காரன் பொருள் வாங்குபவனுக்கு, பணம் அளித்து பொருள் வாங்க செய்வது போல். பணம் வழங்குவதை நிறுத்தி விட்டால், பொருள் வாங்க முடியாத நிலைமை. கடைகாரனுக்கு வியாபாரம் இல்லை. யார் அமெரிக்காவின் இத்தகைய கடைக்காரன்? ஆம். ஜப்பான் தான். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் பலகீனமாக கருதப்படுகிறது. இன்றைய பொருளாதார வல்லுனர்கள், ஜப்பானின் நுகர்வு திறன் குறைவாக உள்ளதனாலேயே அவர்களின் பொருளாதாரம் பலகீனமாக கருதபடுவதாக சொல்கிறார்கள்.

ஜப்பானியர்களின் சேமிப்பு மட்டும் $1.3 ட்ரில்லியன். இந்தியாவின் ஜி.டி.பியை போன்று மும்மடங்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி அந்நாட்டின் நுகர்வு திறனை பொருத்தும் அமையும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

சேமித்தல் பாவம் செய்வதற்கு சமம் என்றாகிவிட்டது.

ஆகவே, சேமிப்பதை குறைத்து, செலவு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் செலவு செய்ய, ஒரு சேமிக்கும் முட்டாளை உங்கள் வசம் வைத்து கொள்வதும் நல்லது. ;-)

Monday, November 3, 2008

பெண்களே, காத கொஞ்சம் குடுங்க இங்க!!!

ஆம்பளைங்க எல்லாம் நம்ம பொண்ணுங்ககிட்ட என்ன சொல்லணும் நினைக்கிறாங்க.. இத ரூம் போட்டு யோசிச்சதுல சிக்கினதுதாங்க இந்த பதிவு..

* அம்மாடி நீங்க எப்ப பார்த்தாலும், உங்க பய புள்ளைங்க கிட்ட இந்த கேள்விய கேட்டு டார்ச்சர் பண்றீங்களாம். அது என்ன கேள்வினா, "நீங்க என்னைய உண்மைலயே லவ் பண்றீங்களா?" இத ஒரு நாளைக்கு ஒரு முறை உங்க புருஷன்கிட்டயோ, அல்லது காதலன் கிட்டயோ கேட்கலனா தூக்கம் வராது போல.. இத கேட்கறது நால எங்களுக்கு உங்க மேல அதிகமான காதல் வர போறது இல்ல. இத திருப்பி திருப்பி கேட்கறது நாள எரிச்சல் தான் அதிகம் ஆகும். அப்டி காதலிக்காம உங்க மேல பாசம் இல்லாத இருந்த உங்களைய விட்டு எப்பவோ போய் இருப்பாய்ங்க.. புருஞ்சிக்கங்கோ..

* அடுத்த மேட்டர் என்னன்னா உங்களடுயவர் எல்லாத்துலயம் பெஸ்டா இருக்கணும்னு நினைக்ரதுல தப்பு கிடையாது. ஆனா இன்னொனுத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும். அவங்களும் சாதாரண மனுஷங்கதான். அத அண்டர்லைன் பண்ணிக்குங்கோ. சூப்பர் மேன் மாதிரி தல கீழா நின்னு சாகசம் பண்ண முடியாது, தெரியாது. எதோ உங்கள சந்தோசமா வச்சிப்போம்.

* நீங்க சொல்ற இன்னொரு கம்பளைண்ட் என்னன்னா, இவிங்களுக்கு வீட்ட நீட்டாவே வச்சிக்க தெரியாது. அட, அப்டி இருக்கணும்னு சட்டமா? வீடே நீட்டா இல்லைனாலும், ஒரே களேபரமா இருந்தாலும் எங்களோட சட்டைய எங்க வச்சி இருந்தாலும் அத எடுத்துருவோம் இல்ல. அவ்ளோதான் மேட்டரு.

* நாங்க, நீங்க அழகா இருக்கீங்கனு சொன்ன எங்க மனுசுல இருந்துதான் அந்த வார்த்த வருது. அதுவும் எல்லாரயும் பார்த்து சொல்லிடறது இல்ல. குறிப்பிட்ட சில்ரதான் சொல்லுவோம். உங்களுக்கு ரெண்டு கொம்பு ஒரு வாலு இருந்தா அழகா இருக்கீங்கனு சொல்ல எங்களுக்கு என்ன பைத்தியமா?

* நாங்களும் வீட்ல உங்களுக்கு உதவி செஞ்சிகிட்டு தான் இருக்கோம். செய்றதே இல்லைங்கறது சில மனைவிமார்களின் புலம்பல். அதெல்லாம் உண்மை இல்லைங்கோ. நாங்க எல்லாம், எங்களோட பல்ல நாங்களே தான் துலக்கிக்கிறோம். நாங்களே எங்களுக்காக சாப்பிடுறோம். எங்களுக்காக நாங்களே தான் தூங்கறோம். இதுவே உங்களுக்கு செய்யும் உதவி தானே.

* எங்களுக்கு ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் அழகு தான். உங்களைய காதலிக்றதனாளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாளையும் வேற பெண்களை பார்ககூடாதா? (என்னா ஒரு வில்லத்தனம்). இருந்தாலும் அந்த ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் உங்களுக்கு பின்னாடி தான்.

* லேப்டுனா லெப்டு தான். ரைட்டுனா ரைட்டு தான். இன்னொரு தடவ சொல்றேன், லேப்டுனா லெப்டு தான், உங்க கற்பனையில உள்ள மாதிரி வேற திசை கிடையாது. நீங்களும் குழம்பி உங்க பின்னாடி வரவங்களுயும் குழப்பாதீங்க. இது வாழ்க்கைங்கற ரோட்ல ட்ராபிக் ஜாம் உண்டாக்கிடும்.

* ஷ்ஷ்ஷ்ஷ்.. நாங்களும் அழுவோம். ஆனா அது உங்களுக்கு தெரிஞ்சிடகூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்போம். ஒரு ஆம்பள எப்ப தெரியுமா முத தடவையா அழுவான், அவன் ஒரு பொண்ண விட்டு பிரியும் போதுதான்.

என்ன, நான் ரூம் போட்டு யோசிச்சு எழுதனது சரிதான. எதாவது விட்டு போய் இருந்தா நீங்களும் சொல்லுங்க பின்னூட்டதுல.

Saturday, November 1, 2008

கேள்வியும் பதிலும்...

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. எனது பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

பின்னுட்டங்களில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில்.

1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்?
பின்னூட்டம் தமிழில் போட்டால் தான் தமிழன் என்று ஒத்துகொள்வீர்களா? தமிழில் ஆர்வம் உள்ளதால் தான் தமிழ் பதிவுகளை தேடி படித்து பின்னோட்டம் இடுகிறார்கள்.

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்.

2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்?
எத்தனை பேர் கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உத்வி செய்து கொண்டு இருக்கீறார்கள் என்று தெரியுமா?

வாழை என்ற ஒரு அமைப்பு உள்ளது பற்றி நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. விவரம் இங்கே.

இது போல ஏராளமானோர் உள்ளனர்.
கிராமத்து அருமை என்றால் என்ன செய்ய வேண்டும்? மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்று எதிர் பார்கீரீர்களா?

3. ஐ.டி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர?
அப்படி செய்திருந்தால் அமெரிக்கா இங்கு வந்து நிற்காது.
சாதனைகளை பட்டியலிட இந்த இடம் போதாது.
இதோ அமுது தமிழில் இந்த கேள்வியெல்லாம் என்னிடம் எங்கோ உள்ள நீங்கள் கேட்க வழி செயபடுள்ளது போதாதா?

4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்?
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இதில் என்ன தவறு?

5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்?
மற்ற துறைகளில் உள்ளவர்கள் கொடுக்கும் அளவை விட இங்கு அதிகம் தான். எதாவது அரசு அலுவலகங்களில் சென்ற அனுபவம் உண்டா? இங்கே தான் அய்யா, customer satisfaction and customer respect.

6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்?
கொடுத்து இருப்பதால் தான் இத்தகைய வளர்ச்சி.

7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்?
பத்து ஆண்டுகளுக்கு பின் நோக்கி சென்று, இன்று உள்ள உள் நாட்டு கட்டமைப்பை, உள் நாட்டு வளர்ச்சியை எண்ணி பார்க்கவும்.

8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா?
இது ஒன்று போதாதா? மற்றவை எல்லாம் தன்னாலே வந்து விடும்.

9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்?
இதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

//நாட்டில் விலைவாசி உயர்ந்தால் யாரை கேட்கணும்? மளிகை கடைக்காரனிடம் கேளுங்கள் அல்லது நிதி அமைச்சரை கேளுங்கள்.
வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கும் வீட்டுகாரர்களை கேளுங்கள்.

10. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா?
எமது உழைப்பிற்கு அறிவிற்கும் தான் அய்யா, இந்த சம்பளம்.

11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா?
இங்கே உள்ளவர்கள் யாரும் ஆட்டு மந்தையாக இருக்க முடியாது. எல்லோரும் செய்வதை திருந்தத்தான் செய்கிறார்கள்.

12. கலாச்சாரம்?
அப்படியேதான் உள்ளது.

13. மொழி?
தமிழ் நன்றாகவே வளர்ந்து உள்ளது. அமெரிக்காவில் இருந்தாலும் நமது தமிழை இணையத்தில் ஏற்றி உள்ளோம்.


பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த SKவிற்கு நன்றி. அவரது பதில் இங்கே.

1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்? - நாங்க தினமும் உபயோகிக்கும் மொழிஇல் தட்டச்சு செய்வது எளிதானது என்பதால் அப்படி போட்டிருக்கலாம் .
2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்? - அதை எப்படி காட்ட வேண்டும் என்று நினைகிறீர்கள்?
3. ஐ.ரி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர? - முதலில் நீங்கள் என்ன சாதனை பண்ணி இருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த துறை ஐ. டி யை விட அதிகம் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்? - வெளி நாட்டுக்கு செல்வது என்ன அப்படி ஒரு பாவமா? எங்கள் பிழைப்பு அப்படி.
5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்? - நீங்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இடத்தில் இந்த கேள்வியை கேளுங்கள்.
6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்? - இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?
7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்? மற்றவர்கள் செய்ததை விட அதிகமாகவே செய்துள்ளோம்
8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா? வேறு என்ன பலன் எதிர் பார்கிறீர்கள்
9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்? - எந்த கேள்வியை ஆடோகாரரிடமும் , வீட்டு உரிமையாளர்களிடமும் கேளுங்கள்.
10. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா? தாரளமாக
11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் ஒன்றும் செய்வதில்லை
12. கலாச்சாரம்? - எங்களுக்கு உள்ளூர் கலாச்சாரமும் தெரியும் உலக கலாச்சாரமும் தெரியும்.
13. மொழி? - அலுவல் காரணமாக ஆங்கிலத்தில் பேசினாலும் எங்கள் மொழியை நாங்கள் விட்டு கொடுப்பதில்லை.