Friday, October 17, 2008

உங்கள் பாஸ் எதிரில் என்ன பாட்டு பாடலாம்?

உங்கள் பாஸ் நல்லவராக இருந்தால்:
1. எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்..
2. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவரே..
3. ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..

உங்கள் ஆப்புரைசல் நல்லபடியாக வந்தால்:
1. ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..
2. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி கொடுக்கும்போது வள்ளல் ஆகலாம்.

உங்கள் அப்புரைசலில் ஆப்பு வைத்தால்:
1. என்கிட்டே மோதாதே நான் ராஜாதி ராஜனடா..
2. நான் பொல்லாதவன், பொய் சொல்லாதவன்...
3. என் கதை முடியும் நேரமிது..
4. புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை...
5. எங்கே செல்லும் இந்த பாதை..
6. போடா போடா புண்ணாக்கு, போடாத தப்பு கணக்கு..
7. உன்குற்றமா என் குற்றமா யார நானும் குற்றம் சொல்ல..

சம்பளம் போதவில்லை என்றால்:
1. வரவு எட்டணா, செலவு பத்தணா..
2. நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க..
நான் ஒரு முட்டாளுங்க.. (இன்னும் இந்த வேளையில் இருப்பதால்...)

பாஸ் சூப்பர் பிஃகரா இருந்தால்:
1. உனக்காக தானே இந்த உயிர் உள்ளது, உன் துயரம் தாங்க என் தோள் உள்ளது..
2. கங்கைக்கரை தோட்டம், கண்ணி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே...

டார்ச்சர் செய்பவராக இருந்தால்:
1. வாராய் நீ வாராய், போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. (அப்படியே கூட்டி சென்று மொட்டை மாடியில் இருந்து தள்ளி விடலாம்).
2. எங்க ஏரியா உள்ள வராதே..
3. உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா..
4. ரம்பம் பம் ஆரம்பம், ரம்பம் பம் பெரும் துன்பம்..
5. ஏன் பிறந்தாய் மகனே.. ஏன் பிறந்தாய்??

உங்களுக்கு தெரிந்ததை, நீங்கள் இங்கே பின்னூட்டமாக சொல்லலாம்.. :)

4 comments:

a said...

:-O idhula neenga endha paatu padreenga dailyum?? :-P

பூச்சாண்டியார் said...

//:-O idhula neenga endha paatu padreenga dailyum?? :-P//

அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவரே..

A: வருகைக்கு நன்றி..

Perumal said...

poda poda punaaku

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி பெருமாள்..

Post a Comment